Sunday, 21 September 2008

எழுத அவா

எழுத வேண்டும் என்ற அவா நம்மில் பலருக்கு உண்டு. நான் மட்டும் அதற்க்கு விதி விலக்கு அல்ல. பத்திரிக்கைகளுக்கு எழுதினால் திரும்ப வரும் பயம். இப்படி ஒரு சந்தர்ப்பத்தில் அலி பாபாவின் அற்புத விளக்கு போல் எனக்கு கிடைத்தது
இந்த வலைப்பூ. அது மட்டும் அல்ல நான் சேர்ந்திருக்கும் குழுமங்களால் நிறைய நல்ல வலைப்பூக்களின்
அறிமுகமும் ஆகியிருக்கிறது.
முத்துச்சரம் என்று ஒரு வலைப்பூ. பெயரன் எடுத்த ஒரு மூதாட்டி எழுதுகிறார், ரசமாக இருக்கிறது. இந்த வலைப்பூவை எனக்கு அறிமுகப்படுத்திய பண்புடன் குழுவினர்க்கு எனது நன்றி. நாம் எழுதுவது வெறும் வார்த்தைகளை மட்டும் இருக்கக் கூடாது, அவை நமது உணர்ச்சிகளை படிப்பவருக்கு புரிய வைக்க வேண்டும் என்று முத்துச்சரம் எனக்கு உணர்த்தியது. எனது தமிழ் இன்னும் மூன்றாம் வகுப்பு நிலையில் உள்ளது என்பதனை என் குழுமத்தின் தமிழை படித்தபின் உணர்கிறேன். என் தமிழ் நன்கு வளர்ந்து கொண்டிருக்குறது. நன்றி நண்பர்களே....


Friday, 29 August 2008

தமிழ் வலைப்பூக்கள்

கடந்தசில நாட்களாக சில வலைப்பூக்களுக்கு சென்று வருகிறேன். அவற்றுள் சில மிகவும் நன்றாக இருக்கின்றன. "மரத்தடி" மற்றும் "பண்புடன்" எனும் இரு வலைப்பூக்களில் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு அது பற்றி விவாதிக்கிறார்கள். சில கருத்துக்கள்
மனதை நெருடுவுதாக இருந்தாலும் சில கருத்துக்கள் மனதை வருடுகின்றன. மற்றவர் மனதை புண்படுத்தாத வகையில் நமது கருத்துக்களை வெளியிட்டால் தமிழரது பண்பாடு தரத்தில் இன்னும் உயரும். அவற்றுள் ஒரு கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சது. தமிழ் மொழியை நாம் இன்று எப்படி பேசுகிறோமோ அப்படியே கவிதையை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். பழகு தமிழ் (டிக்கெட், குட் மார்னிங் போன்றவை) நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

Tuesday, 22 July 2008

நான் ரசித்த ஒரு புத்தகம்

சமீபத்தில் எனக்கு ஒரு அற்புதமான புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு ஆங்கில புத்தகம். புத்தகத்தின் தலைப்பு "பத்து வயதில் மணமகள், பதினைந்து வயதில் தாயார்" என்பதாகும். ஆசிரியர் எழுபத்து ஆறு வயதான ஒரு மூதாட்டி. அவரது கணவர்( ஐம்பத்து ஏழு' வருட மணவாழ்க்கை) திடீரென கணவர் மறைந்து போகவும் சோகத்தில் ஆழ்ந்த அம்மாவை திசை திருப்ப அவரது பெண்கள் அவரை தமது வாழ்கை வரலாற்றை எழுதும்படி தூண்டினார்கள். பத்து வயதில் கல்யாணமாகி, பதினைந்து வயதில் தாயாகிய தனது கதையை சுவைபட எழுதி இருக்கிறார் திருமதி சேது ராமசுவாமி. கண்டியில் பிறந்த இவர், திருவனந்தபுரத்தில் வாழ்க்கைப்பட்டு, தனது வாழ்க்கையின் வெகு நாட்களை டெல்லியில் கழித்திருக்கிறார். சுமார் எழுபது வருட அனுபவத்தில் நம் நாட்டின் வரலாறும் கலாச்சாரமும் சுவைபட கூறியிருப்பது சிறப்பு. கல்வி தாகமும் சங்கீத தாகமும் சிறிய வயதில் கனவாகி விட, தனது முதிய வயதில் தனது மகள்களின் மூலம் அவரது இந்த தாகம் எப்படி தணிந்தது என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறார் சேது மாமி. படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.

Monday, 16 June 2008

சுஜாதா - என் இனிய நண்பனே

இன்று நான் ஒரு சைட்டுக்கு போயிருந்தேன். திண்ணை என்று பெயர். நல்ல கதைகளும் கட்டுரைகளும் நிறைந்த ஒரு சைட். இதில் நமது சுஜாதா அவர்கள் இறந்த பொது அஞ்சலியாக ஒரு சிறுகதையை வெளியிட்டிருந்தார்கள். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் "திண்ணை" என்னும் சைட் போய் பாருங்கள். இதே மாதிரி சுஜாதா என்னும் வேறு பல சைட் பார்த்தேன். "மாமி" என்று ஒருவர் மிக நன்றாக எழுதி இருக்கிறார். பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நிறைய பேர் சுஜாதா இப்படி நமக்கு மெக்சிகோ சலவைக்கரியின் ஜோக் சொல்லாமலே போய்விட்டாரே என்றும் எழுதி இருக்கிறார்கள். வேடிக்கையாய் இருந்தது.
எனக்கென்னமோ என் அம்மா இறப்புக்கு நான் எத்தனை வேதனைபட்டேனோ அதில் சற்றும் குறையாத வேதனை இப்போதும் ஏற்ப்பட்டது. ஒரு மிகப்பெரிய நஷ்டம் வந்த மாதிரி உணர்வு. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். இன்றும் விகடனில் சுவடுகளை படித்து சுஜாதா இன்னும் நம்மிடையே இருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறேன். ஒரு முகம் தெரியாத ரசிகையையே இடத்தை தூரம் பாதித்திருக்கிறார் என்றால் அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு எத்தனை சங்கடமாய் இருக்கும் இல்லையா?