Tuesday, 22 July 2008
நான் ரசித்த ஒரு புத்தகம்
சமீபத்தில் எனக்கு ஒரு அற்புதமான புத்தகத்தை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அது ஒரு ஆங்கில புத்தகம். புத்தகத்தின் தலைப்பு "பத்து வயதில் மணமகள், பதினைந்து வயதில் தாயார்" என்பதாகும். ஆசிரியர் எழுபத்து ஆறு வயதான ஒரு மூதாட்டி. அவரது கணவர்( ஐம்பத்து ஏழு' வருட மணவாழ்க்கை) திடீரென கணவர் மறைந்து போகவும் சோகத்தில் ஆழ்ந்த அம்மாவை திசை திருப்ப அவரது பெண்கள் அவரை தமது வாழ்கை வரலாற்றை எழுதும்படி தூண்டினார்கள். பத்து வயதில் கல்யாணமாகி, பதினைந்து வயதில் தாயாகிய தனது கதையை சுவைபட எழுதி இருக்கிறார் திருமதி சேது ராமசுவாமி. கண்டியில் பிறந்த இவர், திருவனந்தபுரத்தில் வாழ்க்கைப்பட்டு, தனது வாழ்க்கையின் வெகு நாட்களை டெல்லியில் கழித்திருக்கிறார். சுமார் எழுபது வருட அனுபவத்தில் நம் நாட்டின் வரலாறும் கலாச்சாரமும் சுவைபட கூறியிருப்பது சிறப்பு. கல்வி தாகமும் சங்கீத தாகமும் சிறிய வயதில் கனவாகி விட, தனது முதிய வயதில் தனது மகள்களின் மூலம் அவரது இந்த தாகம் எப்படி தணிந்தது என்பதை நன்றியுடன் நினைவு கூர்கிறார் சேது மாமி. படிக்க வேண்டிய ஒரு புத்தகம்.
Subscribe to:
Posts (Atom)