Friday 29 August, 2008

தமிழ் வலைப்பூக்கள்

கடந்தசில நாட்களாக சில வலைப்பூக்களுக்கு சென்று வருகிறேன். அவற்றுள் சில மிகவும் நன்றாக இருக்கின்றன. "மரத்தடி" மற்றும் "பண்புடன்" எனும் இரு வலைப்பூக்களில் நல்ல கருத்துக்களை எடுத்துக்கொண்டு அது பற்றி விவாதிக்கிறார்கள். சில கருத்துக்கள்
மனதை நெருடுவுதாக இருந்தாலும் சில கருத்துக்கள் மனதை வருடுகின்றன. மற்றவர் மனதை புண்படுத்தாத வகையில் நமது கருத்துக்களை வெளியிட்டால் தமிழரது பண்பாடு தரத்தில் இன்னும் உயரும். அவற்றுள் ஒரு கவிதை எனக்கு ரொம்ப பிடிச்சது. தமிழ் மொழியை நாம் இன்று எப்படி பேசுகிறோமோ அப்படியே கவிதையை உருவாக்கியிருக்கிறார் கவிஞர். பழகு தமிழ் (டிக்கெட், குட் மார்னிங் போன்றவை) நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.