Monday 16 June, 2008

சுஜாதா - என் இனிய நண்பனே

இன்று நான் ஒரு சைட்டுக்கு போயிருந்தேன். திண்ணை என்று பெயர். நல்ல கதைகளும் கட்டுரைகளும் நிறைந்த ஒரு சைட். இதில் நமது சுஜாதா அவர்கள் இறந்த பொது அஞ்சலியாக ஒரு சிறுகதையை வெளியிட்டிருந்தார்கள். மிகவும் நன்றாக இருந்தது. நீங்களும் "திண்ணை" என்னும் சைட் போய் பாருங்கள். இதே மாதிரி சுஜாதா என்னும் வேறு பல சைட் பார்த்தேன். "மாமி" என்று ஒருவர் மிக நன்றாக எழுதி இருக்கிறார். பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். நிறைய பேர் சுஜாதா இப்படி நமக்கு மெக்சிகோ சலவைக்கரியின் ஜோக் சொல்லாமலே போய்விட்டாரே என்றும் எழுதி இருக்கிறார்கள். வேடிக்கையாய் இருந்தது.
எனக்கென்னமோ என் அம்மா இறப்புக்கு நான் எத்தனை வேதனைபட்டேனோ அதில் சற்றும் குறையாத வேதனை இப்போதும் ஏற்ப்பட்டது. ஒரு மிகப்பெரிய நஷ்டம் வந்த மாதிரி உணர்வு. காலப்போக்கில் சரியாகிவிடும் என்று நினைக்கிறேன். இன்றும் விகடனில் சுவடுகளை படித்து சுஜாதா இன்னும் நம்மிடையே இருக்கிறார் என்று நினைத்துக்கொள்கிறேன். ஒரு முகம் தெரியாத ரசிகையையே இடத்தை தூரம் பாதித்திருக்கிறார் என்றால் அவருடன் நெருங்கிப்பழகியவர்களுக்கு எத்தனை சங்கடமாய் இருக்கும் இல்லையா?