Saturday 27 September, 2008

முத்துச்சரத்தில் ஒரு முத்து

இன்று முத்துச்சரம் என்ற ஒரு இணையத்தளத்துக்கு போயிருந்தேன். பண்புடன் நண்பர் சுரேஷ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு தளம் இது. ராமலக்ஷ்மி என்ற ஒரு அம்மையார் எழுதுகிறார். சரளமான, நகைச்சுவை இழையோட, எல்லா விதமான தலைப்புகளிலும் எழுதுகிறார் இவர். செப்டெம்பர் இதழில் இவர் மூன்று தலைப்புகளில் எழுதி இருக்கிறார். இவற்றில் தொலைக்காட்சிகளில் வரும் ரியாலிடி ஷோ பற்றிய இவரது கருத்துக்கள் அருமை. குழந்தைகளை போட்டியில் பங்கேற்கும் போது
வெற்றியை மட்டும் குறிக்கோளாய் கொள்ளக்கூடாது - பங்குபெறுதல் ஒரு நல்ல அனுபவம் என்ற உணர்வை அவர்களுக்கு ஊட்ட வேண்டும் என்று எழுதியிருந்தார். அருமை. இதை எல்லா தாய் மார்களும் படிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.

1 comment:

ராமலக்ஷ்மி said...

நன்றி மைதிலி. பதிவு பற்றிய உங்கள் கருத்துக்குப் பிறகு இப்போதுதான் தங்கள் வலைப்பூவுக்கு வர நேரம் வாய்த்தது.