Sunday, 21 September 2008

இந்தக்காலத்து பசங்கள்

இந்த காலத்து பசங்களுக்குத்தான் என்ன மூளை? என்று சில சமயம் நினைக்கத்தோன்றுகிறது. நான் சிறு பிள்ளையாகி இருந்தபோது எனது பாட்டி சொன்ன கதைகளை அப்படியே நம்புவேன். பாட்டிக்கு எல்லாம் தெரியும் என்ற ஆழ்ந்த நம்பிக்கை. இப்பொழுது என் மகன் அவன் பாட்டியிடம் கதை கேட்கும் பொழுது அடடா நமக்கு இதெல்லாம் தோன்ற வில்லையே என்று நினைத்துக்கொள்வேன். ராமாயணக்கதை - ராமன் தசரதர் சொல்படி காட்டுக்கு செல்கிறார். என் மகன் சொல்கிறான் - பாட்டி பார்த்தாயா, அப்பா பேச்சை கேட்டதால் தானே ராமன் கட்டுக்கு போகவேண்டி இருந்தது?
இன்னொரு முறை - இது ஐயப்பன் கதை - சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்தவர் ஐயப்பன் என்று பாட்டி கூற விழுந்து விழுந்து சிரித்தான் இவன். ஏன் என்று பாட்டி கேட்க, பாட்டி உனக்கு ஒண்ணுமே தெரியலே. ஒரு ஆணும் இன்னொரு ஆணும் கல்யாணம் பண்ணிக்கலாம் ஆனால் குழந்தை பிறக்காது. அதுக்கு ஒரு ஆணும் ஒரு பெண்ணும்தான் கல்யாணம் பண்ணிக்கணும், என்றானே பார்க்கலாம். இடையில் நான் புகுந்து விஷ்ணு பெண்ணாக மாறும் திறமை உள்ளவர் என்றும் அவர் பெண்ணாக மாறும் சமயம் பிறந்தவரே ஐயப்பன் என்று கூறியதும் ஒரு மாதிரி ஒப்புக்கொண்டான். இன்னும் என்ன கேட்பானோ என்னை அந்த கடவுளர்கள்தான் காப்பற்ற வேண்டும்.

No comments: